செய்திகள் :

சிஎஸ்கேவின் 40% சிக்ஸர்களை அடித்தது தோனி..! தோல்விக்குக் காரணம் கூறிய முன்னாள் வீரர்!

post image

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது

ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் 8 சிக்ஸர்கள் அடித்தது. அதில் தோனி மட்டுமே 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதாவது, 37.5 சதவிகிதம் தோனியால் அடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2 ஓவர்களில் தோனி 3 சிக்ஸர்கள் அடித்தார். மீதமுள்ள 18 ஓவர்களில் 5 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன.

18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியுற்றது. அதாவது, 3 சிக்ஸர்கள். இதுதான் சிஎஸ்கே அணி தோல்விக்கு காரணமாக பேசப்பட்டு வருகின்றன.

இது குறித்து முன்னாள் நியூசி. வீரர் சைமன் டௌல் கூறியதாவது:

தோனியை குறைகூற முடியாது

12 பந்துகளில் தோனி 3 சிக்ஸர்கள் அடிக்கிறார். அவரைத் தவிர்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணி வீரர்களும் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள்.

தோனியை இன்னும் முன்னதாக களமிறக்க வேண்டுமென அதனால்தான் சொல்கிறோம். 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்த தோனியை நாம் குறைகூற முடியாது.

ஜடேஜா முன்னதாக வந்திருக்க வேண்டும்

கான்வே ஸ்டிரைக் ரேட் 140இல் விளையாடுகிறார். ஆனால், வெற்றிபெற அணிக்கு அவர் 190 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருக்க வேண்டும். அவருக்குப் பதிலாக ஜடேஜாவை அனுப்பியது சரிதான். ஆனால், அவர் இன்னமும் முன்னதாக வந்திருக்க வேண்டும் என்றார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ப... மேலும் பார்க்க

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க