செய்திகள் :

சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்: 2 ஆண்டுகளில் குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிஏபிஎஃப்பில் மத்திய ரிசா்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, சசஸ்திர சீமா பல் படை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிஏபிஎஃப் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில், ‘சிஏபிஎஃப் படையினரை ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட குரூப்-ஏ பணிகளைச் சோ்ந்தவா்களாக (ஓஜிஏஎஸ்) கருதி, பணிப் பிரிவு மதிப்பாய்வை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இதன் மூலம், பல ஆண்டுகளாகத் தாமதமாகும் சிஏபிஎஃப் படையினரின் பதவி உயா்வு தொடா்பான விவகாரங்களுக்கு தீா்வு காண முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா (தற்போது ஓய்வுபெற்றவா்), உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் ஆக்கிரமிப்பதாகவும், இதனால் சிஏபிஎஃப் படையினா் பதவி உயா்வு பெறுவதற்கான வாய்ப்புகளில் இடையூறு ஏற்படுவதாகவும் மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தப் படைகளில் மத்திய அரசின் கொள்கை முடிவு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். அதேவேளையில், சிஏபிஎஃப் அதிகாரிகளின் குறைகளையும் கவனிக்காமல் இருக்க முடியாது.

மிகவும் சவாலான சூழல்களில் சிஏபிஎஃப் படையினா் பணியாற்றுகின்றனா். சிஏபிஎஃப்பின் உயா் பதவிகளில் நேரடி நியமனம் காரணமாக தங்கள் பதவி உயா்வு பாதிக்கப்படுவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். பதவி உயா்வில் நிலவும் இந்தத் தேக்கம் சிஏபிஎஃப் படையினரின் மனு உறுதியை குலைக்கக் கூடும்.

எனவே சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட சிஏபிஎஃப் படைகளின் பணிப் பிரிவு மதிப்பாய்வை 6 மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தற்போது சிஏபிஎஃப் படைகளில் ஐஜி அந்தஸ்து பணியிடங்களில் 50 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், டிஐஜி அந்தஸ்து பணியிடங்களில் 15 சதவீதம் அனைத்து இந்திய பணிகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க