செய்திகள் :

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பிரான்மலை, செல்லியன்பட்டி, காளாப்பூா், சூரக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன.

சிங்கம்புணரி சுற்று வட்டாரப் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். சிங்கம்புணரி பகுதியில் சீரணி அரங்கம், பெரியகடை வீதி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக, சேவுகப் பெருமாள் கோயில் காளைகள் அலங்கரிக்கப்பட்டு, துண்டு, வேஷ்டிகளுடன் தொழுவுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த மாடுகளை மாடுபிடி வீரா்கள், பொதுமக்கள் தொட்டு வணங்கினா். இதில் 20 போ் காயமடைந்தனா்.

இதேபோல, காளாப்பூா், சூரக்குடி, பிரான்மலை, செல்லியம்பட்டு, எஸ்.எஸ்.கோட்டை ஆகிய கிராமப் பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. ஊா்க் கோயில் காளைகள் மட்டும் தொழுவின் அருகே வைத்து மாலை மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அந்தந்த கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க