செய்திகள் :

சிதம்பரம் கோதண்ட ராமர் கோயில் தேரோட்டம்!

post image

சிதம்பரம் மேல ரதவீதியில் உள்ள கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் மேல வீதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மார்ச் 28-ம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. அதன்படி, மார்ச் 29-ம் தேதி கொடி யேற்றம் நடைபெற்றது.

தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதிஉலா நடை பெற்றது. இதைத் தொடர்ந்து, கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.

மேல ரதவீதி கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேரானது நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்து வழிபட்டனர்.

தினமும் காலை திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மாலை சீதா கல்யாணமும் நடைபெற்றது. ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏப்.8-ம் தேதி செவ்வாய்க்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், ஏப். 9-ம் தேதி விடாயாத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமே நடைபெற்ற கோதண்டராமர் கோயில் தேரோட்டம்

இதையும் படிக்க | சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வருக்கு கண்டனம்: அண்ணாமலை

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவ... மேலும் பார்க்க

கோடையில் குளிர்விக்க வரும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெரும் ஆதாயம்: பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நி... மேலும் பார்க்க

அவர்களால் அழ மட்டுமே முடியும்: பிரதமர் மோடி பேச்சு

திமுக கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப... மேலும் பார்க்க