செய்திகள் :

தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெரும் ஆதாயம்: பிரதமர் மோடி

post image

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் ராமேசுவரம் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது.

2014-க்கு பிறகு, மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவில் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தை இணைக்கவல்ல உயர்த்தப்பட்ட இடைவெளி, அருமையான கட்டமைப்புக்கான மேலும் ஓர் எடுத்துக்காட்டு.

இன்றும்கூட, சுமார் ரூ. 8,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரத்தினுடனான இணைப்பையும் மேம்படுத்தும்.

சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும்கூட, சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கட்டமைப்பு தொடர்பான பணிகளுக்கிடையே, இவற்றின் அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதை மறந்துவிடக் கூடாது.

கடந்த பத்தாண்டுகளில் சமூகக் கட்டமைப்பில்கூட இந்தியா சாதனைகாணும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கானோருக்கும் இதன் ஆதாயம் கிடைப்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஏழை,எளிய 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கின்றன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள், ஏழை, எளியோருக்கு கிடைத்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 11 லட்சம் குடும்பங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதனால், நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் ஆதாயமடைந்திருக்கிறார்கள்.

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர வ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்... மேலும் பார்க்க

சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.தன்னையும், தனது குடும்பத்தினரை... மேலும் பார்க்க

சிவாஜி வீட்டில் பங்கு இல்லை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு

சென்னை: நடிகர் சிவாஜியின் வீட்டில் எனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகா் சிவாஜி கணேசனின் அன்... மேலும் பார்க்க

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியே(ற்றம்)! செங்கோட்டையன் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று அந்த தியாகி யார் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, பதாகைககளைக் காட்டியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.ஆனால், அதிமுக எம்எல... மேலும் பார்க்க