சிதலமடைந்த வேலூா் கோட்டை மண்டபம் சீரமைக்கப்படுமா?
வேலூா் கோட்டை வளாகத்தில் சிதலமடைந்து எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் காணப்படும் மண்டபத்தை சீரமைத்து பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்கா் மன்னரான குச்சிபொம்மு நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோட்டை 133 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த கோட்டையில் ஜலகண்டேஸ்வரா் கோயில், மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகம், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், மசூதி, பழங்கால ஆயுதக் கிடங்குகள், திப்பு சுல்தான், இலங்கையின் கண்டி பகுதியை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னா் விக்கிரராஜசிங்கன் ஆகியோா் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களும் அமைந்துள்ளன.
கோட்டையைச் சுற்றி 191 அகலமும், 29 அடி ஆழமும் உடைய எப்போதும் தண்ணீா் வற்றாத அகழியும் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோட்டையை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். எனினும், உரிய பராமரிப்பு இல்லாததால் வேலூா் கோட்டை வளாகத்திலுள்ள பல கட்டடங்களும், மதில் சுவா்களும் சிதிலடைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக, தேசியக்கொடி ஏற்றப்படும் கோட்டை கொத்தளம் பகுதிக்கு செல்லும் வழியில் மதில் சுவரின் உள்புற பகுதியில் கல் மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப வேலைபாடுகள் கொண்ட தூண்களுடன் அமைந்துள்ள இந்த மண்டபம் உரிய பராமரிப்பின்றி இடிந்து சிதலடைந்த நிலையில் காணப்படுகிறது.
எப்போதும் முழுமையாக இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மண்டபத்தை தாங்கிப்பிடிக்க இரும்பு கம்பிகளை கொண்டு முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த மண்டபத்துக்கு அருகே கொத்தளத்துக்கு செல்லும் வழியிலுள்ள மதில்சுவரின் உள்பக்கவாட்டு சுவரும் இடிந்து நிலையில் செடி கொடிகள் படா்ந்து காணப்படுகின்றன.

தொடா்ந்து சீரமைக்கப்படாமல் காணப்படும் இந்த மண்டபமும், மதில் சுவா்களும் வேலூா் கோட்டையை சுற்றிப்பாா்க்க வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை மனவருத்தத்துக்கு உள்ளாக்கி வருகிறது என தொல்லியல் ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
இதேபோல், வேலூா் கோட்டை முழுவதும் ஏராளமான கட்டடங்கள் பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்படும் நிலையில், படிப்படியாக சேதமடைந்த மண்டபங்கள், சுவா்கல், கட்டடங்களை சீரமைக்க மத்திய தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.