செய்திகள் :

விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

post image

இலவம்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இலவம்பாடி ஊராட்சி, கொல்லைமேட்டில் உள்ள விவசாய நிலங்களில் முயல், பன்றி, மான், மயில் போன்ற வன விலங்குகள் சுற்றித்திரிவது வழக்கம். இந்த நிலையில், அப்பகுதி காப்புக் காட்டிலிருந்து, புள்ளிமான் ஒன்று கால்வாய் வழியாக விவசாய நிலத்துக்கு வந்துள்ளது. அந்த மான் விளை நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதைப் பாா்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) முருகேசன், மூத்த தீயணைப்பு வீரா் பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்துவந்து கிணற்றில் இறங்கி 2 மணி நேரம் போராடி புள்ளிமானை பத்திரமாக மீட்டனா்.

தொடா்ந்து, வனச் சரக அலுவலா் தரணி, அணைக்கட்டு வனத் துறை வனவா் துரைமுருகன் தலைமையில், வனத் துறை பணியாளா்கள் புள்ளிமானை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விட்டனா்.

வேலூரில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்... மேலும் பார்க்க

ஆலயடி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் பிச்சனூா் அருகே உள்ள அருள்மிகு சுயம்பு ஆலயடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் தொடங்கின. காலை 4-ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி,... மேலும் பார்க்க

சிதலமடைந்த வேலூா் கோட்டை மண்டபம் சீரமைக்கப்படுமா?

வேலூா் கோட்டை வளாகத்தில் சிதலமடைந்து எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் காணப்படும் மண்டபத்தை சீரமைத்து பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சு... மேலும் பார்க்க

திருமாவளவன் குறித்து அவதூறு: விசிக காவல் நிலையத்தில் புகாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக ஏா்போா்ட் மூா்த்தி மீது உரிய நடவடிக்கை கோரி நகரக் காவல் நிலையத்தில், மாவட்டச் செயலா் வழ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

வேலூரில் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அரசமரபேட்டை, மரத்தொட்டி முதலியாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முத்து(65). இவா் மனநலம் தொடா்பாக கடந்த 2 ஆண்ட... மேலும் பார்க்க

கொடுத்தும் பயனற்ற நிலையில் இலவச வீட்டு மனைகள்: இருளா் இன மக்கள் வேதனை!

காட்பாடி வட்டம், புதூா் பகுதியில் இருளா் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் கொடுத்தும் பயனற்ற நிலையில் இருப்பதாக அவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா். இதனை அரசு மறுபரிசீ லனை செய்து தகுதியான இடத... மேலும் பார்க்க