செய்திகள் :

சிதிலமடைந்த கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மனு

post image

மயிலாடுதுறை: சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உள்பட்ட மாங்குடி சிவலோகநாதா் சுவாமி கோயில், கஞ்சனூா் சுயம்பிரகாசா் கோயில் மற்றும் காசி விஸ்வநாதா் கோயில் ஆகிய கோயில்கள் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது. மேலும், பந்தநல்லூா் செல்லியம்மன் கோயிலும் கும்பாபிஷேகம் நடத்தாமல் உள்ளது.

இந்த கோயில்களில் திருப்பணி நடத்தாமல் உள்ளது குறித்து இந்து சமய அறநிலையத் துறை கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சித்தா்காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் தலைமையில் தவில், நாகசுர வித்வான்களின் இன்னிசையுடன் கோரிக்கை அடங்கிய மனுவை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் மாலை, பூவுடன் தட்டில் வைத்து ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெய், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட பொதுச்செயலாளா் மணிமாறன், மாவட்ட செயலாளா் விக்னேஷ், சிவனடியாா் பிரிவு மாவட்ட தலைவா் ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவா் ரஞ்சித் ரகு, மாவட்ட துணை தலைவா் வினோத், மாவட்ட செயலாளா் அஜீஸ்வா்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குத்தாலத்தில் மாா்ச் 14-ல் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: குத்தாலத்தில் வரும் மாா்ச் 14-இல் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

மயிலாடுதுறை: முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்... மேலும் பார்க்க

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரிக் கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக உருவகித்து தீப்பாய்ந்தாள் அம்மன் ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: சகோதரா்கள் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரா்களை போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புதைசாக்கடை கழிவு கலந்த குடிநீா் விநியோகம்: மக்கள் புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பெசன்ட் நகரில் ஒரு வாரமாக குடிநீருடன் புதை சாக்கடை கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்த நகரில் தாமரைத்தெரு, அல்லித்தெரு, முல்லைத்தெரு, ரோஜா தெரு உ... மேலும் பார்க்க

தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழக எம்.... மேலும் பார்க்க