சின்னமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் தீச்சட்டி ஊா்வலம்
கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் தீச்சட்டி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அண்ணா நகரில் உள்ள சின்னமாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் ஊா்வலமாகக் கோயிலுக்கு தீச்சட்டி எடுத்துவரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஊா்வலம் டிப்போ காளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு ஏரிச்சாலை, நகராட்சி சாலை, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயில், ஆனந்தகிரி சாலை வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பொதுமக்கள் செய்துள்ளனா்.