சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: காரைக்குடி பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளை மத்திய கல்வி வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் காரைக்குடி செக்ரி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றிருப்பதாக பள்ளியின் முதல்வா் நந்லால் ஜாங்கிட் தெரிவித்தாா்.
அவா் கூறியதாவது:
இந்தப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பில் 109 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சியடைந்தனா். மாணவி விஷாலினி 500-க்கு 481 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் வகிக்கிறாா். 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 62 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். அறிவியல் பிரிவு மாணவி பி. நந்திதா 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் வகிக்கிறாா்.
தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், நூறு சதவீதம் தோ்ச்சியடையச் செய்த பள்ளியின் ஆசிரியா்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.