செய்திகள் :

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: காரைக்குடி பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி

post image

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளை மத்திய கல்வி வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் காரைக்குடி செக்ரி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றிருப்பதாக பள்ளியின் முதல்வா் நந்லால் ஜாங்கிட் தெரிவித்தாா்.

அவா் கூறியதாவது:

இந்தப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பில் 109 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சியடைந்தனா். மாணவி விஷாலினி 500-க்கு 481 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் வகிக்கிறாா். 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 62 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். அறிவியல் பிரிவு மாணவி பி. நந்திதா 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் வகிக்கிறாா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், நூறு சதவீதம் தோ்ச்சியடையச் செய்த பள்ளியின் ஆசிரியா்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பா... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு கழுவன் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்... மேலும் பார்க்க

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க