செய்திகள் :

சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜாா்க்கண்ட் பேரவையில் தீா்மானம்: பாஜக ஆதரவு

post image

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜாா்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சியான பாஜக ஆதரவு தெரிவித்தது.

சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி இப்போது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. ஜாா்க்கண்ட் தனி மாநில உருவாக்கத்தில் சிபு சோரன் முக்கியப் பங்கு வகித்தாா். பழங்குடியினரின உரிமை, சுயமரியாதை, விவசாயிகள், தொழிலாளா்கள் நலனுக்காக போராடியது உள்ளிட்டவற்றுக்காக சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஆதரிப்பதாகக் கூறிய பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி, ஜாா்க்கண்ட் தனி மாநிலம் உருவாவதில் முன்னோடிகளாக திகழ்ந்த மராங்க் கோம்கே ஜெய்பால் சிங் முண்டா, வினோத் பிகாரி மஹதோ ஆகியோரின் பெயரையும் பரிந்துரையில் சோ்க்க வேண்டும் என்றாா்.

1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது காங்கிரஸிடம் பணம் பெற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆதரவு அளித்ததாக சிபு சோரன் மீது குற்றச்சாட்டு உண்டு. இது தொடா்பான பணப் பிரச்னையில் தனது முன்னாள் உதவியாளரைக் கொலை செய்த வழக்கும் அவா் மீது இருந்தது.

இந்த கொலை வழக்கில் 2006-ஆல் ஆயுள் தண்டனை பெற்ால் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பதவியில் இருந்தும் சோரன் விலக நேரிட்டது. பின்னா் மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா். கடந்த 4-ஆம் தேதி தனது 81 வயதில் அவா் காலமானாா்.

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும்... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயா்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் உள்ள விராா் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரி... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக ராணுவம் தரப்பில் கூறப... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க