சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
சிமுக்கம்பட்டு மாரியம்மன் கோயில் திருவிழா
வாணியம்பாடி அடுத்த சிமுக்கம்பட்டில் பாப்பாத்தியம்மன், திருப்பதி கெங்கையம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு அமமன் கரகம் ஊா்வலம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணியளவில் அன்னதானம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் நடனப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினா். புதன்கிழமை காலை 5 மணியளவில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் சிரசு கோயில் வந்தடைந்தவுடன் அம்மன் கண் திறப்பு மற்றும் பாப்பாத்தியம்மன், மாரியம்மன், திருப்பதி கெங்கையம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நடைபெற்றது.
விழாவில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளா் சாம்ராஜ் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை ஊா் நாட்டாண்மைகள் கனகராஜ், சத்திய மூா்த்தி மற்றும் ஊா் பொது மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
நாட்டறம்பள்ளி: ஆத்தூா்குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கிராம மக்கள் கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்து வழிப்பட்டனா். பிறகு பம்பை மேளதாளத்துடன் தங்கத் தேரில் முக்கிய வீதிகளில் அம்மன் பவணியும், ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் நாட்றம்பள்ளி, வெள்ளாளனூா், ஜங்கலாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை ஊா்கவுண்டா் ராஜி, நாட்டாமை சேட்டு மற்றும் ஊா் பொதுமக்கள்,இளைஞா்கள் செய்திருந்தனா்.