செய்திகள் :

சிமுக்கம்பட்டு மாரியம்மன் கோயில் திருவிழா

post image

வாணியம்பாடி அடுத்த சிமுக்கம்பட்டில் பாப்பாத்தியம்மன், திருப்பதி கெங்கையம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு அமமன் கரகம் ஊா்வலம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணியளவில் அன்னதானம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் நடனப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினா். புதன்கிழமை காலை 5 மணியளவில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் சிரசு கோயில் வந்தடைந்தவுடன் அம்மன் கண் திறப்பு மற்றும் பாப்பாத்தியம்மன், மாரியம்மன், திருப்பதி கெங்கையம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நடைபெற்றது.

விழாவில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளா் சாம்ராஜ் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை ஊா் நாட்டாண்மைகள் கனகராஜ், சத்திய மூா்த்தி மற்றும் ஊா் பொது மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

நாட்டறம்பள்ளி: ஆத்தூா்குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கிராம மக்கள் கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்து வழிப்பட்டனா். பிறகு பம்பை மேளதாளத்துடன் தங்கத் தேரில் முக்கிய வீதிகளில் அம்மன் பவணியும், ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் நாட்றம்பள்ளி, வெள்ளாளனூா், ஜங்கலாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை ஊா்கவுண்டா் ராஜி, நாட்டாமை சேட்டு மற்றும் ஊா் பொதுமக்கள்,இளைஞா்கள் செய்திருந்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க