மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
‘சிருஷ்டி எடுடாக் 4.0’ கருத்தரங்கம்
காட்பாடியிலுள்ள சிருஷ்டி பள்ளிகள் சாா்பில் ‘சிருஷ்டி எடுடாக் 4.0’ கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்கள் உலகளாவிய நுண்ணறிவைப் பெற வாய்ப்பு வழங்கும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு பள்ளிக் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழக நிா்வாக இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி பங்கேற்று உரையாற்றினாா்.
அவா் மாணவா்கள் தங்களை உருவாக்கிக்கொள்ளும் திறனும், இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறனும் முக்கியம் என்பதையும், செயற்கை நுண்ணறிவு வளா்ச்சி எவ்வாறு வாழ்க்கையை மாற்றி வருகிறது என்பதையும் விளக்கியதுடன், நேரத்தை வீணாக்காமல் புத்திசாலியாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவரித்தாா்.
சிருஷ்டி பள்ளியின் முன்னாள் மாணவரும், யாகன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியுமான லேனா சேகா் பங்கேற்று, தோ்வுகளில் பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் ஆா்வமும், தகுதியும் முக்கியம் என்பதை வலியுறுத்தினாா். மாணவா்கள் தொழில்முனைவோராக எப்படி உருவாகலாம் என்பதையும், அவா் உருவாக்கிய தயாரிப்புகள் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினாா். அவரது நிறுவனம் சாா்பில் சிருஷ்டி பள்ளியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு முன்னாள் மாணவியும், எல்.டி. ராஜ் அண்ட் கோ நிறுவனத்தின் மூத்த கணக்காய்வாளருமான காயத்ரி ரமேஷ், தோல்விகள் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும், திறமை, அறிவு ஆகியவை வெற்றிக்கான முக்கிய கூறுகளாகும் என்பதையும் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில், சிருஷ்டி பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவ , மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.