செய்திகள் :

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

post image

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக தேசிய இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ``தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லை. காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலருக்குகூட பாதுகாப்பு இல்லை.

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது, தீவிரவாதத் தாக்குதல். ஆனால், அதனை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம் என்பதற்கிணங்க, மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியாவுக்கு அழைத்து வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி பெற்றுள்ளார்.

இதையும் படிக்க:திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

திமுக அரசு, தனது கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2024-ல் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவிகிதம்வரை குறைந்துள்ளது; அடுத்த தேர்தலில் 20 சதவிகிதம்வரையில் குறையும். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறந்த முதல்வர்கள் பட்டியலிலும் சரிந்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தனியார் நிறுவனக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும், தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ``தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும்போது, தமிழக அரசே பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது’’ என்று பதிலளித்தார்.

சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையி... மேலும் பார்க்க

முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை: அண்ணாமலை

முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை, எங்களுக்கு தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அமெரிக்காவை பொருத்தவரை டிரம்ப் ஒரு விஷயத்தை சொல்லி மக்களின் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் (பிப். 15, 16) வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும் நாளையும்(பிப். 15, 16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்... மேலும் பார்க்க

சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெள... மேலும் பார்க்க

மயிலாடுதுறை படுகொலை சம்பவத்துக்கு முன்பகைதான் காரணம்: காவல்துறை விளக்கம்!

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய சம்பவத்தில் முன்விரோதம்தான் காரணம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து... மேலும் பார்க்க

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க