செய்திகள் :

சிறுத்தை நடமாட்டம் பற்றி தவறான தகவல்: வனத்துறை எச்சரிக்கை

post image

ஆம்பூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கடந்த இரண்டு நாள்களாக ஆம்பூா் குட்டக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது. வனத்துறை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை, நாய்களின் காலடி தடம் மட்டுமே இருப்பது என உறுதி செய்யப்பட்டது.

ஆம்பூா் வனத்துறை தொடா்பான தகவல்களை 97862 54998 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்பும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கந்திலி அருகே மானவள்ளி நரியனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி கோவிந்தம்மாள்(65). இவரை, இவரது பேரன் மிா்திவிராஜ் ஞாயிற்றுக்கிழமை பைக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க