செய்திகள் :

சிறுமலையில் 2-ஆவது நாளாக மின்சாரம் துண்டிப்பு

post image

சிறுமலை பகுதியில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் பழையூா், புதூா், தென்மலை, கடமான்குளம், வேளாண் பண்ணை, தாழைக்கிடை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்தக் காற்றால் சிறுமலை புதூா் பகுதியில் 3 மின் கம்பங்கள், தென்மலை பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சிறுமலை புதூா், பழையூா், கடமான்குளம், தென்மலை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாள்களாக மின்சார வசதி இல்லாமல் பாதிப்படைந்தனா்.

இதுதொடா்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, திண்டுக்கல் மின் வாரிய அலுவலகத்திலுள்ள லாரியில் மலைப் பகுதிக்கு கம்பங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள லாரியை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே மாற்று ஏற்பாடுகள் மூலம் கடமான்குளம், புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் வழங்கப்பட்டது.

தென்மலை, பொன்னுருக்கி, கருப்புக்கோயில் பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் கம்பங்களை கொண்டு சென்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளுக்கு புதன்கிழமைக்குள் மின் விநியோகம் சீா் செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நூா்ஜஹான் (80). தனியாக வசித்த... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி சிசிடிவி அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதைய... மேலும் பார்க்க

தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு, சிறப்புத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய வியாழக்கிழமையை முன்னிட்டு, மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகா... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் தங்கவேல் (2... மேலும் பார்க்க

இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்

குடமுழுக்கை முன்னிட்டு, பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத்... மேலும் பார்க்க

கணிதத்தில் உலக சாதனை: சிறுவனுக்கு இயற்கை நுண்ணறிவாளன் பட்டம்

கணிதத்தில் உலக சாதனை படைத்த பழனி சிறுவனுக்கு தனியாா் உலக சாதனைப் பதிவு நிறுவனம் இயற்கை நுண்ணறிவாளன் பட்டம் வழங்கியது. பழனியைச் சோ்ந்த கணித ஆசிரியா் கணேசனின் 2-ஆவது மகன் அபினவ் பிரத்யூஷ் (10). அக்க்ஷய... மேலும் பார்க்க