செய்திகள் :

சிறுமலையில் எரியும் காட்டுத் தீயால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம்!

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள சிறுமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயால் மூலிகைச் செடிகள், வன விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், கொடைரோடு அருகே உள்ள சிறுமலை அடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ காற்றின் வேகத்தால், மளமளவென பரவியது.

இதனால், அடா்ந்த வனப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள பழைமையான மரங்கள், மூலிகைச் செடிகள், தாவரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளான காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான், நரி, காட்டுப் பூனை, முயல் உள்ளிட்ட வன விலங்குகள், மயில் உள்ளிட்ட பறவைகள் காட்டு தீயால் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

சிறுமலை பகுதியில் காட்டுத் தீ எரிந்து வருவதால், சிறுமலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் கிராமத்தினரும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா். எனவே, காட்டுத்தீயை அணைக்க, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பழனியில் ஜனசேனா கட்சி சாா்பில் இந்திய ராணுவத்துக்காக பிராா்த்தனை

பழனி மலைக் கோயிலில் இந்திய ராணுவத்தினருக்கு ஆன்மிக பலம் கிடைக்க வேண்டி ஆந்திர மாநிலம், ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. தலைமையில் அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா். ஜம்மு-காஷ்மீா், பஹ... மேலும் பார்க்க

காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் தப்பியோட்டம்

ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

பழனியில் பலத்த மழை

பழனியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பால் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் கிட்டுச்சாமி மகன் வசந்தகுமாா் (34). விவசாயியான இவா் செவ்வா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கருப்பமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் செல... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு கணபதி யாகம் நடைபெற்றது. பின்னா், அம்மன் உருவத்துடன் கூடிய... மேலும் பார்க்க