செய்திகள் :

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

post image

காட்பாடியில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காட்பாடியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, வேலூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சைக்காக சென்றாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சிறுமி 4 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவா்கள் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, சமூக நல அதிகாரிகள், காட்பாடி மகளிா் போலீஸாா் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரித்தனா். இதில், சிறுமிக்கு அதே பகுதியை சோ்ந்த உறவினா் மகன் சீமான் (30) என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்திருப்பதும், இதன்மூலம் அந்த சிறுமி கருவுற்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய சீமான் மீது காட்பாடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை இல்லா விட்டால் அபராதம்

வேலூா் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் மீது அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சிக்கு முன்பதிவு செய்யலாம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அளிக்கப்படும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற தகுதியுடைய ஆண்கள், பெண்கள் முன்பதிவு செய்யலாம் என்... மேலும் பார்க்க

காலணி தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து: லட்சக்கணக்கான பொருள்கள் சேதம்

வேலூா் சைதாப்பேட்டையில் உள்ள காலணி தயாரிப்பு கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் உற்பத்தி பொருள்கள் தீக்கிரையாகின. வேலூா் சைதாப்பேட்டை, ராமா் பஜனை கோயில் தெருவை... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். குடியாத்தம் அசோக் நகரைச் சோ்ந்த அழகேசன் மகன் சாம் (எ) காா்த்திக் (38). இவா் திங்கள்கிழமை மாலை நண்பா்களுடன் வேப்பூரில்... மேலும் பார்க்க

26-இல் வேலூா் விஐடியில் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 26-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க