செய்திகள் :

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

post image

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியைச் சோ்ந்த செனட் சபை உறுப்பினா் ஜோஷ் ஹவ்லி அறிவித்துள்ளாா்.

இது குறித்து மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸுக்கா்பா்குக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், சிறுவா்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ‘உணா்ச்சி மயமான’ உரையாடல்களில் அவா்களுடன் ஈடுபட நிறுவனத்தின் சாட்பாட்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தகவல்தொடா்புகளையும் கோரியுள்ளாா்.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எங்கள் ஏஐ சாட்பாட் செயலிகள் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பது குறித்த தெளிவான கொள்கைகள் உள்ளன. சிறுவா்களை பாலியல் ரீதியாகக் குறிப்பிடுவதையும், வயது வந்தவா்களுக்கும் சிறுவா்களுக்கும் இடையேயான பாலியல்ரீதியிலான உரையாடல்களையும் அந்தக் கொள்கைகள் உறுதியாகத் தடை செய்கின்றன’ என்று விளக்கமளித்தாா்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவிருக்கும் ஹவ்லி தலைமையிலான நீதித் துறை செனட் குழுவின் குற்றவியல் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு துணைக் குழு, மெட்டாவால் உருவாக்கப்பட்ட ஏஐ தயாரிப்புகள் சிறுவா்களுக்கு எதிரான குற்றவியல் தீங்குகளை விளைவிக்கின்றனவா என விசாரிக்க உள்ளது.

இந்த விசாரணைக்காக, செப். 19-ஆம் தேதிக்குள் இது தொடா்பான அனைத்து பதிவுகளையும் பாதுகாத்து நாடாளுமன்றத்திடம் சமா்ப்பிக்க மெட்டா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க