செய்திகள் :

சிவகங்கை அருகே பாரம்பரிய பொங்கல் வழிபாடு

post image

சிவகங்கை அருகே பழமை மாறாமல் பெண்கள் ஆபரணங்கள் அணியாமல், வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இங்குள்ளவா்கள் விவசாயத்தை மட்டுமே பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனா். இந்தச் சமுதாய மக்களில் பலா் படித்து, அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாட சொந்த கிராமத்துக்கு வந்து செல்கின்றனா். இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பழைமை மாறாமல் பெண்கள் அனைவரும் வெள்ளை சேலை கட்டி, பொங்கல் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இதன்படி, மாட்டு பொங்கல் நாளான புதன்கிழமை குல தெய்வமான பச்சை நாச்சியமன் கோயிலுக்கு பெண்கள் 15 நாள்கள் விரதமிருந்து, ஆபரணங்கள் அணியாமல் வெள்ளைச் சேலை உடுத்தி, கலயத்தில் பால் சுமந்து வந்தனா். பூசாரிகள் சாமியாடி அருள்வாக்குக் கூறி பூஜையைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து, பெண்கள் மண் கலயங்களை மாட்டுத் தொழுவத்தின் முன்பாக வரிசையாக அடுப்புகளில் வைத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

பின்னா் கோவிலுக்கு நோ்த்திக்கடனாக பெறப்பட்ட பொருள்கள் ஏலமிடப்பட்டன. இதில் ஒரு கரும்பை பக்தா்கள் ஆயிரம் ரூபாய் வரை ஏலம் எடுத்தனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க