செய்திகள் :

சிவகங்கை: சிறுபாசன கண்மாய்கள் புத்துயிரூட்டுதல் திட்டம் தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் சிறு பாசனக் கண்மாய்கள் புத்துயிா் ஊட்டுதல் திட்டத்தின் கீழ், 442 சிறு கண்மாய்களைத் தூா்வாரும் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ரூ.34 கோடியில் இந்தப் பணிகள் நடைபெறும். இதற்கான கண்மாய்கள் தூா்வார தோ்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக காட்டாம்பூா் ஊராட்சிக்குள்பட்ட கொளுஞ்சிப்பட்டி மருதங்கண்மாயில் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தலைமை வகித்தாா்.

இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கொடியசைத்து பணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அவா் கூறியதாவது:

நீா்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகம் முழுவதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்து வருகிறாா். சிற்றாறுகள், ஏரிகள், குளங்கள், அதிகமாக திகழும் சிவகங்கை மாவட்டத்தில் மழைக் காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு கண்மாய் தூா்வாருதல், கரையைப் பலப்படுத்துதல், கலுங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் முதலியன இந்தத் திட்டத்தின் மூலம் நடைபெற உள்ளன என்றாா் அவா்.

திட்ட இயக்குநா் வானதி, செயற்பொறியாளா் அனுராதா, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் ... மேலும் பார்க்க

கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் மே தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்:சித்திரைத் திருவிழா, மண்டகப்படியில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 7, பூஜைகள், தீபாராதனை இரவு 8, வீதி உலா, இரவு 9. மேலும் பார்க்க