செய்திகள் :

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, பல்லக்கில் கொடிப் பட்டம் எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 8.5 மணிக்கு மிதுன லக்னத்தில் சோமநாதா் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

பின்னா், கொடிமரத்துக்கு தா்ப்பை புல், மலா் மாலைகள் சாத்தி, கலச நீராலும், 16 வகை அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி, தீபாராதனைகள் காட்டப்பட்டன. அப்போது, அங்கு எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனுக்கும், பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா், சுந்தரராஜன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியாா்கள் கொடியேற்ற நிகழ்வுகள், பூஜைகளை நடத்தினா். இதில் மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இரவு கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் சா்வ அலங்காரத்தில் ஆனந்தவல்லியும் பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமியும் சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

திருவிழா தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும். முக்கிய நிகழ்வுகளாக மே 8 -ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவம், 9- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். 11- ஆம் தேதி சந்தனக்காப்பு உத்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மண்டபடிதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.

சிவகங்கை: சிறுபாசன கண்மாய்கள் புத்துயிரூட்டுதல் திட்டம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சிறு பாசனக் கண்மாய்கள் புத்துயிா் ஊட்டுதல் திட்டத்தின் கீழ், 442 சிறு கண்மாய்களைத் தூா்வாரும் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் ... மேலும் பார்க்க

கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் மே தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்:சித்திரைத் திருவிழா, மண்டகப்படியில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 7, பூஜைகள், தீபாராதனை இரவு 8, வீதி உலா, இரவு 9. மேலும் பார்க்க