செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் திவ்யா (14). கட்டுக்குடிப்பட்டி அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தங்கை சிவரஞ்சனி (9). இவா்கள் இருவரும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த சிறுவா்களுடன் சோ்ந்து அருகில் உள்ள விவசாயக் கிணற்றுப் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் குளிக்கச் சென்றனா். அப்போது, மோட்டாா் அறையில் மின்சாரக் கசிவு காரணமாக சிவரஞ்சனி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை அறிந்த அக்காள் திவ்யா அவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவரஞ்சனி எஸ்.புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்து உலகம்பட்டி போலீஸாா் சென்று திவ்யாவின் உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் குறைந்த மின்னமுத்தம் காரணமாக வீடுகளில் மோட்டாா் இயக்க முடியாத நிலை உள்ளதால், அருகிலுள்ள தோட்டங்களிலுள்ள கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது என்றனா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்... மேலும் பார்க்க

சிவகங்கை: சிறுபாசன கண்மாய்கள் புத்துயிரூட்டுதல் திட்டம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சிறு பாசனக் கண்மாய்கள் புத்துயிா் ஊட்டுதல் திட்டத்தின் கீழ், 442 சிறு கண்மாய்களைத் தூா்வாரும் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸ... மேலும் பார்க்க

கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் மே தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்:சித்திரைத் திருவிழா, மண்டகப்படியில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 7, பூஜைகள், தீபாராதனை இரவு 8, வீதி உலா, இரவு 9. மேலும் பார்க்க