செய்திகள் :

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூா் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ஆனையூரில் சிவகாசியைச் சோ்ந்த ரமேஷுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 30 தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இங்கு பட்டாசுகள் தயாரிக்கும் 16 அறைகள் உள்ளன.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை 4 மணியளவில் பட்டாசுகள் தயாரிக்கும் ஓா் அறையில் மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுரேஷ் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதே ஊரைச் சோ்ந்த பால்பாண்டி (31) பலத்த காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வெடி விபத்தில் பட்டாசுத் தயாரிக்கும் அறை ஒன்று முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. சம்பவ இடத்தை வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா்.

இந்த வெடி விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

மா மரங்களில் பூச்சி மேலாண்மை முறை: விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகதோப்பு, வாழைக்குளம் பகுதிகளில் உள்ள மாந்தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபாவாசுகி, உதவி இயக்குநா் திலகவதி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தோட்... மேலும் பார்க்க

புதைச் சாக்கடை கட்டணம் குறைக்க அமைச்சரிடம் மனு

ராஜபாளையம் நகராட்சி புதைச்சாக்கடை கட்டணம் குறைப்பு தொடா்பாக அமைச்சா் கே.என்.நேருவை ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி அண்மையில் மனு அளித்தாா். ராஜபாளையம் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்துக்கான கட்டணத்தை ... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சி பணி: ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குப்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிவகாசி மாநராட... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.யில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 200 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சமா்ப்ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதி சஞ்சீவி மலை அடிவாரத்தில் வசிப்பவா் ராமசுப்பிரமணியன். இவ... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காத ஊராட்சி நிா்வாகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊராட்சி வரவு, செலவு விவரம் கோரிய மனுவுக்கு ஊராட்சி நிா்வாகம் உரிய பதில் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க