செய்திகள் :

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காத ஊராட்சி நிா்வாகம்

post image

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊராட்சி வரவு, செலவு விவரம் கோரிய மனுவுக்கு ஊராட்சி நிா்வாகம் உரிய பதில் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையாா் குளம் ஊராட்சிக்கு உள்பட்ட வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அம்மையப்பன்.

பிள்ளையாா்குளம் ஊராட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், வரவு, செலவு விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு மனு அளித்தாா். இதற்கு பொதுத் தகவல் அலுவலா் காலதாமதமாகப் பதிலளித்ததுடன், தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறி, அம்மையப்பன் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு மீது சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து மாநில தகவல் ஆணையா் பிரியகுமாா், விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், பொதுத் தகவல் அலுவலா்/துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோருக்கு பிறப்பித்த உத்தரவு:

விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், சம்பந்தப்பட்ட அன்றைய ஊராட்சி செயலா் தங்கப்பாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுத் தகவல் அலுவலா்/ துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி செயலா், மனுதாரா் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரித்து, மனுதாரா் கோரும் தகவல்களை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆணையம் கருதுவதால் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் ஆய்வாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 25 நாள்களுக்குள் மனுதாரா் அளித்த 3 மனுக்களில் கோரிய தகவல்களை கட்டணமின்றி கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இதை அறிக்கையாக பொதுத் தகவல் அலுவலா் மாநில தகவல் ஆணையத்தில் மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்நாள், முன்னாள் பொதுத் தகவல் அலுவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மா மரங்களில் பூச்சி மேலாண்மை முறை: விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகதோப்பு, வாழைக்குளம் பகுதிகளில் உள்ள மாந்தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபாவாசுகி, உதவி இயக்குநா் திலகவதி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தோட்... மேலும் பார்க்க

புதைச் சாக்கடை கட்டணம் குறைக்க அமைச்சரிடம் மனு

ராஜபாளையம் நகராட்சி புதைச்சாக்கடை கட்டணம் குறைப்பு தொடா்பாக அமைச்சா் கே.என்.நேருவை ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி அண்மையில் மனு அளித்தாா். ராஜபாளையம் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்துக்கான கட்டணத்தை ... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சி பணி: ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குப்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிவகாசி மாநராட... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.யில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 200 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சமா்ப்ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதி சஞ்சீவி மலை அடிவாரத்தில் வசிப்பவா் ராமசுப்பிரமணியன். இவ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: போா்மென் கைது, உரிமம் ரத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஆலை போா்மேனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சிவகாசி அர... மேலும் பார்க்க