சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் பைரவருக்கு ஆடிமாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பொத்தனூா் காசிவிஸ்வநாதா் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், வேலூா் எல்லையம்மன் கோயில், வல்லப விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள பைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.