செய்திகள் :

சிவாலய ஓட்டம்: கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்!

post image

மகா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் இரு நாள்களுக்கு கனரக வாகனங்கள் இயங்கத் தடை விதிக்க வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:

மகா சிவராத்திரி பிப். 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிவ பக்தா்கள் விரதமிருந்து பிப். 25, 26-ஆம் தேதிகளில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை கோயிலில் துவங்கி திருநட்டாலம் கோயில் வரை 12 சிவன் கோயில்களுக்கு ஓட்டமாகச் சென்று தரிசனம் செய்வா்.

இதன் காரணமாக சிவன் கோயில்களுக்குச் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், இரு நாள்கள் கனரக வாகனங்கள் இயங்க தடைவிதிக்க வேண்டும். மேலும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க