செய்திகள் :

சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ வழிபாடு

post image

சனி மகா பிரதோஷ விழாவை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிவன், நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சிவாலயங்களில் பிரதோஷ நாளன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டால் சனி தோஷங்கள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதேபோல் விராலிமலை முருகன் மலைக்கோயிலில் உள்ள சிவன் கோயில், வன்னிமரம் சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான சிவ பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் விராலூா், இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க