செய்திகள் :

சீன வல்லுநா்கள் விலகல்: இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது

post image

சீன தொழில் வல்லுநா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இருந்து கடந்த 2 மாதங்களில் நூற்றுக்கணக்கான சீன தொழில்நுட்ப வல்லுநா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனா்.

அவா்கள் ஆலை வடிவமைப்பு, ஐஃபோன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் இயந்திரங்களை கையாளப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.

அவா்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது. இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டத்தில் மாற்றமில்லை. கடந்த 2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐஃபோன்களின் எண்ணிக்கை 3.5 கோடி முதல் 4 கோடியாக இருந்தது. இதை நிகழாண்டு 6 கோடியாக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் திட்டமிட்டபடி ‘ஐஃபோன் 17’ மாடல் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவித்தன.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க