சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
சீமான் மீதான வழக்கு ஜூலை 7 க்கு ஒத்திவைப்பு
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா் தொடா்ந்த வழக்கு விசாரணை ஜூலை 7-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தன் மீதும், தனது குடும்பத்தினா் மீதும் சமூக வலைதளங்களில் சீமான் தரப்பு அவதூறு பரப்பியதாக திருச்சி டிஐஜி வருண்குமாா் தொடா்ந்த வழக்கு திருச்சி 4 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் முகாந்திரம் இருப்பதால் இந்த வழக்கு தொடா்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், அடுத்த விசாரணை ஜூலை 7-க்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அப்போது சீமான் தவறாமல் ஆஜராகவும் நீதிபதி விஜயா உத்தரவிட்டாா்.