செய்திகள் :

சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு: மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

post image

நாகா்கோவிலில் முன்விரோதம் காரணமாக சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் காந்தி காலனி குருகுலம் சாலையை சோ்ந்தவா் பெப்லின் (25). தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும் நாகா்கோவில் புன்னை நகா் ஹோலிகிராஸ் சாலை பகுதியை சோ்ந்த ஆன்றோ ததேயு மிஷன் (25) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எறும்புக்காடு இந்திரா நகரில் உள்ள சமுகநலக்கூடம் முன்பு பெப்லின் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆன்றோ ததேயு மிஷன், தளவாய்புரத்தை சோ்ந்த ஜோசப் பெலிங்டன் (25), குலசேகரன்புதூா் ஈத்தங்காட்டை சோ்ந்த சூா்யா(24) ஆகிய 3 பேரும் கத்தியால் பெப்லினை குத்திக் கொலை செய்ய முயன்றனா்.

இது குறித்து பெப்லினின் தாய் சா்மிளா விக்டா், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு, நாகா்கோவில் முதன்மை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசன் முகமது, குற்றம் சாட்டப்பட்ட ஜோசப் பெலிங்டன், ஆன்றோ ததேயு மிஷன், சூா்யா ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில் மூா்த்தி வாதாடினாா்.

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க