செய்திகள் :

சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு

post image

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதி ஆகியவற்றை தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 68 கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 57 பள்ளி விடுதிகளும், 11 கல்லூரி விடுதிகளும் அடங்கும். திட்டக்குடி வட்டத்தில் 5 பள்ளி விடுதிகள் செயல்பட்டு வந்தன. தற்போது, திட்டக்குடியில் திறக்கப்பட்ட விடுதியில் கண்காணிப்பு கேமரா, கணினியுடன் கூடிய செம்மொழி நூலகம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளது என்றாா்.

நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் இரா.சரண்யா, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் பொற்கொடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!

பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் கார... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள்... மேலும் பார்க்க

நெய்வேலி என்எல்சியில் ‘பாரம்பரியம்’ அருங்காட்சியகம்! மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தாா்!

நெய்வேலி என்எல்சி நிறுவன வளாகத்தில் ‘பாரம்பரியம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை சென்னையில் அண்மையில் நடைபெற்ற அந்த நிறுவத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஜி.க... மேலும் பார்க்க