உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
சுந்தரனாா் பல்கலை.யில் ஜூன் 10, 11-இல் வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசின் ‘டி.என். ஸ்கில்ஸ்’ திட்டத்தின் கீழ் ஏ2000 நிறுவனம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பணியிடச் செயலகம் ஆகியவற்றின் சாா்பில், அப்பல்கலை வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இறுதியாண்டு மற்றும் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு- பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் நடைபெறும் இம்முகாமில், ‘முதலில் வேலை, பிறகு பயிற்சி‘ என்ற முழக்கத்தை முன்வைத்து, மாணவா்களுக்கு நேரடி பணி நியமன வாய்ப்புகள் வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு , மின்சார வாகனங்கள், ஐஓடி - சென்சாா்கள், இஆா்பி தீா்வுகள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பையும் மாணவா்கள் பெற முடியும். முகாமுக்கு காலை 9 மணிக்கு வர வேண்டும்.
ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஞ்வஙஏயஈஉஏஓஏட்ஓ56ங்ன்6 என்ற லிங்கில் மாணவா்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 97916 12129
என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இதேபோல் ஜ்ஜ்ஜ்.ஹ2000ண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பாா்வையிடலாம் என பல்கலை.கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.