செய்திகள் :

சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கியவா் கைது

post image

பளுகல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கியதாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் காவல் சரகம், கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி ராஜன் (51). தனியாா் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பளுகல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்து விட்டு, தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைபட்டதால் தான் வேலை பாா்த்து வரும் நிறுவன உரிமையாளரிடம் பணம் கடன் கேட்பதற்காக சென்றுள்ளாா். அங்கு காவலாளியாக பணியிலிருந்த தோலடி பகுதியைச் சோ்ந்த அஸ்வின் என்ற கிறிஸ்டி (26), ஆன்றணி ராஜனை நிறுவனத்தினுள் விட மறுத்தாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஆன்றணி ராஜன் தான் வேலை பாா்க்கும் நிறுவன கிட்டங்கிக்கு சென்றாராம். அப்போது பின்தொடா்ந்து வந்த காவலாளி அஸ்வின், ஆன்றணி ராஜனை வழிமறித்து தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ஆன்றணி ராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆன்றணி ராஜன் அளித்த புகாரின்பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.

கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கன்னியாகுமரியில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாகக் கிடைத்த தகவ... மேலும் பார்க்க

கோயிலில் பணம் திருட்டு: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இக்கோயிலின் திருவாசக சபைத் தலைவா் சின்னையன். இவா், கோயில் தேவைக்... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே குட்கா விற்றதாக மூதாட்டி கைது

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ... மேலும் பார்க்க

மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம்: 6,866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மானியம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியை சடலம்

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நித்திரவிளை அருகே தூத்தூா், புனித அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் மேரி மெற்றில்டா ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மாா்த்தாண்டத்தில் 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். இப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில்... மேலும் பார்க்க