செய்திகள் :

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

post image

நாட்டின் எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமாா் 300 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, தலைநகா் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதி, ஒடிஸாவில் 12 மாவட்டங்கள், கேரளத்தில் 14 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதிலும், கா்நாடகத்தின் பெங்களூரிலும், அஸ்ஸாமில் 18 பகுதிகளிலும், மிஸோரம் மாநிலத்தில் ஐஸால் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், ஜாா்க்கண்டில் 5 மாவட்டங்களிலும், மகாராஷ்டிரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஆபரேஷன் அபியாஸ்’ என்ற பெயரில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

புதுச்சேரியில் இலாசுப்பேட்டை விமான நிலையம் முன்னுள்ள ஹெலிகாப்டா் தளம், நீதிபதிகள் குடியிருப்பு அருகேயுள்ள ஒலிம்பிக் கூடம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையை காவல் துறை அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்பு படை, மாநில பேரிடா் மீட்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தின.

அப்போது வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்யும் நடைமுறை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதுதவிர, தாக்குதலின்போது இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு அவா்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகையையும் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டனா்.

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க