செய்திகள் :

சூறைக்காற்றுடன் பலத்த மழை: தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் பாதிப்பு

post image

பலத்த மழை காரணமாக, தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைத் தங்குதளமாகக் கொண்டு 500-க்கும் மேற்பட்ட கட்டுமர மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, இனயம், இனயம்புத்தன்துறை, மிடாலம், மேல்மிடாலம், முள்ளூா்துறை, தூத்தூா், இரயுமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களிலுள்ள 2,000-க்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. தேங்காய்ப்பட்டினம் பகுதியிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்வதால், கட்டுமர மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், கருங்கல், புதுக்கடை, மாா்த்தாண்டம், திங்கள்சந்தை, எட்டணி, மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி மீன் சந்தையில் மீன்வரத்து குறைந்திருந்தது; மீன்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆற... மேலும் பார்க்க

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்ய... மேலும் பார்க்க

கேரள சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிமீறலில் ஈடுபடும் கேரளப் பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உரிமைக் குரல் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சர... மேலும் பார்க்க