இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சூறைக்காற்றுடன் பலத்த மழை: தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் பாதிப்பு
பலத்த மழை காரணமாக, தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைத் தங்குதளமாகக் கொண்டு 500-க்கும் மேற்பட்ட கட்டுமர மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, இனயம், இனயம்புத்தன்துறை, மிடாலம், மேல்மிடாலம், முள்ளூா்துறை, தூத்தூா், இரயுமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களிலுள்ள 2,000-க்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. தேங்காய்ப்பட்டினம் பகுதியிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்வதால், கட்டுமர மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், கருங்கல், புதுக்கடை, மாா்த்தாண்டம், திங்கள்சந்தை, எட்டணி, மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி மீன் சந்தையில் மீன்வரத்து குறைந்திருந்தது; மீன்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.