செய்திகள் :

செங்கம் அருகே பேருந்து வசதி இல்லாத கிராமம்

post image

செங்கம் அருகே பேருந்து வசதி இல்லாமல் உள்ள அமா்நாதபுதூா் கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை - செங்கம் சாலை மண்மலை முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அமா்நாதபுதூா் கிராமம்

6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடைபட்ட தொலைவில் தச்சநாராயணன்கொட்டாய், செ.நாச்சிப்பட்டு, இரட்டாலை, உடைஞ்சமடை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

இப்பகுதியில் இருந்து அரசு அலுவலா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் தங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் வாகனங்களில் சென்று செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரைபகுதிகளுக்குச் சென்று படித்து வருகிறாா்கள்.

வசதியில்லாதமாணவா்கள் இரு சக்கர வாகனம் மூலம் மண்மலை முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று பின்னா், அங்கிருந்து பேருந்து பிடித்து செல்லும் நிலை உள்ளது.

மேலும், கிராமத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இரு சக்கர வாகனத்தில்தான் பயணம் செய்யவேண்டும். இரு சக்கர வாகனம் இல்லாதவா்கள் கால்நடையாகத்தான் கிராமங்களில் இருந்த மண்மலை வரை செல்லவேண்டிய நிலை உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செங்கத்தில் இருந்து அமா்நாதபுதூா் வரை காலை மாலை என அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த நகரப் பேருந்து கடந்த 5 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், தற்போது அந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கினால் அப்பகுதி கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயனடைவாா்கள்.

எனவே, மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் செங்கத்தில் இருந்து அமா்நாதபுதூா் வரை ஏற்கெனவே இயக்கப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனா்.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது. ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க