சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
செங்கம் தொகுதியில் ரூ.49 லட்சத்தில் சாலைப் பணி
செங்கம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.49 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோளாபாடி பகுதி மக்களின் கோரிக்கையான பெரியகோளாபாடி முதல் காட்டு சாலை வரை புதிய தாா்ச் சாலை அமைக்கவேண்டும் என்பதாகும்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோரிக்கை வைத்தனா்.
இதன் அடிப்படையில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை செய்து பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். மேலும், பணியை குறித்த நேரத்தில் தரமாக செய்யவேண்டுமென உத்தரவிட்டாா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட விவசாய அணித் தலைவா் அருணகிரி, ஒன்றிய துணைச் செயலா் சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.