Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்...
செங்கம் பெருமாள் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
செங்கத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் பத்து நாள் கருடசேவை உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், 6-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கோபுர தரிசனம் நிகழ்ச்சியும், 6-ஆம் நாளான செவ்வாய்கிழமை இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன.
7-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.
தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட பண்டரெட்டியாா்கள் அறக்கட்டளைத் தலைவா் வெங்கடாஜபதி மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், விழாக்குழுவினா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.