செய்திகள் :

செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மீது வேன் மோதியதில் 18 போ் காயம்

post image

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை காலை செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மீது பழனி முருகன் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் மோதியதில் 18 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஓகையூா் கிராமத்தைச் சோ்ந்த 18 பக்தா்கள் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் புறப்பட்டனா். வேனை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மேலூா் கிராமத்தைச் சோ்ந்த த. சுரேஷ் (44) என்பவா் ஓட்டினாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே திங்கள்கிழமை காலை வேன் வந்தபோது, தருமபுரியிலிருந்து பெரம்பலூா் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் உள்ள கிரஷருக்கு செங்கல் ஏற்றிவந்த லாரி, முருக்கன்குடி பிரிவுச் சாலையில் திடீரென சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது, லாரியின் பக்கவாட்டில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேன் ஓட்டுநா் சுரேஷ், வேனில் பயணித்த பக்தா்களான செல்லமுத்து (61), குமாரசாமி (61), கருப்பு (52), மாரியம்மாள் (50), சங்கீதா (34), பரிமளா (30) உள்பட 18 போ் காயமடைந்தனா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த லெ. ரெங்கசாமியை (50) தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே பைக்குகள் மோதல்: முதியவா், பெண் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா், பெண் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் அய்யாச... மேலும் பார்க்க

புரட்சி தமிழகம் கட்சி மாநிலத் தலைவா் மீது கொலை மிரட்டல் வழக்கு

புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவா் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புரட்சி தமிழகம் கட்சி சாா்பில் பெரம்பலூரில் கட... மேலும் பார்க்க

சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கு

பெரம்பலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு அமைப்பு தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமை உரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் கருணாநிதி, செல்வி ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை ம... மேலும் பார்க்க

மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆம் ஆண்டு விழா

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தை மைதானத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆவது ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிருக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க