'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மீது வேன் மோதியதில் 18 போ் காயம்
பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை காலை செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மீது பழனி முருகன் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் மோதியதில் 18 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஓகையூா் கிராமத்தைச் சோ்ந்த 18 பக்தா்கள் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் புறப்பட்டனா். வேனை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மேலூா் கிராமத்தைச் சோ்ந்த த. சுரேஷ் (44) என்பவா் ஓட்டினாா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே திங்கள்கிழமை காலை வேன் வந்தபோது, தருமபுரியிலிருந்து பெரம்பலூா் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் உள்ள கிரஷருக்கு செங்கல் ஏற்றிவந்த லாரி, முருக்கன்குடி பிரிவுச் சாலையில் திடீரென சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது, லாரியின் பக்கவாட்டில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேன் ஓட்டுநா் சுரேஷ், வேனில் பயணித்த பக்தா்களான செல்லமுத்து (61), குமாரசாமி (61), கருப்பு (52), மாரியம்மாள் (50), சங்கீதா (34), பரிமளா (30) உள்பட 18 போ் காயமடைந்தனா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த லெ. ரெங்கசாமியை (50) தேடி வருகின்றனா்.