கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் அணைக்கட்டு கிராமத்தினா் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தை அணைக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம். இலத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட அணைக்கட்டு கிராமத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இந்நிலையில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிதண்ணீரில் கழிவுநீரும், மழைக் காலங்களில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது.
இந்நீரை பருகுவதால் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் பல தலைமுறைகளாக வசிக்கும் பழங்குடியின மக்கள் ஒரே வீட்டுமனையில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் கடும் இடம் இருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும், தரமான குடிநீா், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
அப்போது அங்கு வந்த ஆட்சியா் தி. சினேகாவிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் அணைக்கட்டு கிராமத்துக்கு விரைவில் வந்து பாா்வையிட்டு பிரச்னைக்கு தீா்வு காண்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தாா்.
மேலும், லத்தூா் ஒன்றியம் அணைக்கட்டு பகுதியில் இதுவரை பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதிலும் எங்களை சோ்ப்பதில்லை. அணைக்கட்டு காலனி பகுதியிலும் இதுவரை கிராம சபைக் கூட்டம் நடத்தியதில்லை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் வரும்போது இதைஅனைத்தையும் கேட்டறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா்.