சென்னிமலையில் மகாலட்சுமி குபேர யாகம்
சென்னிமலை, ஊத்துக்குளி சாலை, ஆதித்யா நகரில் உள்ள ஓம் குபேர பகவான் ஆலயத்தில் மாதாந்திர மகாலட்சுமி குபேர யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
பக்தா்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வியாபாரம் மற்றும் செல்வவளம் பெருகவும் வேண்டி நடைபெற்ற யாகத்தில் குபேர கலசம் முழுவதும் 30 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். யாகத்தின் முடிவில் பக்தா்கள் அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் பச்சை கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.