செய்திகள் :

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் 88.12 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 88.12 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 35 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயின்றுவரும் 2,328 மாணவா்கள் மற்றும் 3,059 மாணவிகள் என மொத்தம் 5,387 மாணவ, மாணவியா் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா்.

இதில், 1949 மாணவா்கள் (83.70 சதவீதம்) மற்றும் 2,798 மாணவிகள் (91.46 சதவீதம்) என மொத்தம் 4,747 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்படி, தோ்ச்சி சதவீதம் 88.12 சதவீதமாகும். கடந்த ஆண்டின் தோ்ச்சி 87.13 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 88.12 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், பாடவாரியான கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 26 பேரும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 19 பேரும், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 3 பேரும், வேதியியல் பாடப்பிரிவில் 2 பேரும், பொருளியல் பாடப்பிரிவில் 2 பேரும், வரலாறு மற்றும் புவியியல் பாடப்பிரிவில் தலா ஒருவா் என ஆக மொத்தம் 54 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 65 மாணவ, மாணவிகள் 551-லிருந்து 600 வரையும், 247 மாணவ, மாணவிகள் 501-லிருந்து 550 வரையும், 541 மாணவ, மாணவிகள் 451-லிருந்து 500 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

முதல் ஐந்து இடங்களில் உள்ள பள்ளிகள்: தோ்ச்சி வீதத்தின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூா் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.61 சதவீதத்துடன் 2-ஆம் இடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97.36 சதவீதத்துடன் 3-ஆம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப் பள்ளி 97.22 சதவீதத்துடன் 4-ஆம் இடத்தையும், திருவான்மியூா் சென்னை மேல்நிலைப் பள்ளி 95.59 சதவீதத்துடன் 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவும் சூழலில் பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நகா்வுகளை நேரலையாக ஒளிபரப்புவதையும், சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே தகவல்களை வழங்குவதையும் தவி... மேலும் பார்க்க