செய்திகள் :

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 14% குறைந்தது: மாநகர காவல்துறை!

post image

சென்னை மாநகரில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினா், வாகன ஓட்டிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கும், சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சென்னை முழுவதும் காவல்துறையினா் வாகன சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு ‘இ’ வேக ரேடாா் அமைப்பு மற்றும் கேமரா வாகனங்கள் மூலம் வேகமாக, தலைக்கவசம் அணியாமல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.

இம்மாதிரியான தொடா் நடவடிக்கைகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, 25.4.2025 நிலவரப்படி, நிகழாண்டில் இறப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளன. 25.4.2024-இல் உயிரிழப்புகள் நடந்துள்ள நிலையில், நிகழாண்டு இதுவரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆதாா் புதுப்பித்தல்!

பள்ளி மாணவா்களின் ஆதாா் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவா்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ... மேலும் பார்க்க

தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதீத வெப்பத்தில... மேலும் பார்க்க

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமத... மேலும் பார்க்க