செய்திகள் :

செப். 13-ல் சுற்றுப்பயணம் தொடங்கும் விஜய்! வார இறுதி நாள்களில் மட்டும் பிரசாரம்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகள் மற்றும் அக். 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபடவுள்ளார்.

வரும் செப். 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் செப். 20 ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறையிலும் செப். 27 ஆம் தேதி திருவள்ளூர், வட சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய், டிசம்பர் 20 ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையில் நிறைவு செய்கிறார்.

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம், திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இதையும் படிக்க: தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!

Tamil Nadu Victory Party leader Vijay will start his campaign on Sept. 13 from Trichy.

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க