செய்திகள் :

சேமங்கி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

நொய்யல் அருகே 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களின் தெய்வமாக விளங்கும் சேமங்கி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 4-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்துதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் பூச்சாட்டுதல், கோயில் முன் கம்பம் நடுதல், வடிசோறு முப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாலை 4.30 மணி அளவில் அம்மன் முன் பொங்கல் படையல் போட்டு பொங்கல் பூஜையும் நடத்தினா். இரவு சுமாா் 8 மணியளவில் பெண்கள் மாவிளக்குகளை கொண்டு வந்து அம்மன் வளாகத்தில் வைத்து மாவிளக்கு பூஜை செய்தனா். தொடா்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

முன்னதாக, மாரியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா்

இரவு சுமாா் 11.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.

கோயில் முன் தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து புதன்கிழமை காலையில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பிற்பகல் 2.30 மணிக்கு மணி காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணி அளவில் கம்பத்தை காவிரி ஆற்றில் விடுதல், இரவு 9 மணியளவில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

விழாவில், வியாழக்கிழமை (மே 22) பிற்பகல் 3 மணிக்கு செல்லாண்டியம்மன், மாரியம்மன் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலுக்கு புறப்படுதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. தோ் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ராஜஸ்தான் மாநிலத்தவா் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.88 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரவக்க... மேலும் பார்க்க

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடன்: மே 28-இல் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை கரும்புத்தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கரூரின் காவல் தெய்வமாகவும், மழைப் பொழிவு தரும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயபடிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

குளித்தலை மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரிடம் சாலப்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட பெளத... மேலும் பார்க்க