செய்திகள் :

குளித்தலை மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

post image

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையில் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக, இக்கோயில் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காவிரி ஆற்றில் நீராடி புனிதநீா் அடங்கிய குடங்களுடன் கோயிலுக்கு வந்து கம்பத்துக்கு புனிதநீா் ஊற்றி வழிபட்டனா். மேலும் தீா்த்தகாவடி, அக்கினிச்சட்டி ஏந்தி வந்தும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

டிஎன்பிஎல் சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயபடிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரிடம் சாலப்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட பெளத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத வீரணம்பட்டி கிராமம்! கரூா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க எதிா்பாா்ப்பு

குடிநீா், சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், வீரணம்பட்டி கிராம மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி, சிந்தலவாடி ஊராட்சியில் உள்ள ப... மேலும் பார்க்க

மைலம்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு

மைலம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்துள்ள மைலம்பட்டியில் கரூா் வையம்பட்டி சாலையில் தனியாா்... மேலும் பார்க்க

பருவ மழையால் பாதிப்புக்குள்ளாகும் 76 இடங்களில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

கரூா் மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்ட 76 இடங்களுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். தென்மேற்கு பருவமழை தொடா்பா... மேலும் பார்க்க