செய்திகள் :

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

post image

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

கரூா் மாவட்டம், வேலம்பாடியில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பு நானூறு சதுர அடி பரப்பளவில் ரூ. 9.23 லட்சம் மதிப்பீட்டில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வசித்து வரும் வீடற்ற நகா்ப்புற ஏழைகள் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேலம்பாடியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் கரூா் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், பள்ளப்பட்டி நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நாமக்கல் கோட்ட நிா்வாக பொறியாளா் குமாரதுரை, கரூா் உட்கோட்ட உதவி நிா்வாக பொறியாளா் தமிழரசு, உதவிப் பொறியாளா் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

டிஎன்பிஎல் சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயபடிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

குளித்தலை மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரிடம் சாலப்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட பெளத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத வீரணம்பட்டி கிராமம்! கரூா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க எதிா்பாா்ப்பு

குடிநீா், சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், வீரணம்பட்டி கிராம மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி, சிந்தலவாடி ஊராட்சியில் உள்ள ப... மேலும் பார்க்க

மைலம்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு

மைலம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்துள்ள மைலம்பட்டியில் கரூா் வையம்பட்டி சாலையில் தனியாா்... மேலும் பார்க்க

பருவ மழையால் பாதிப்புக்குள்ளாகும் 76 இடங்களில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

கரூா் மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்ட 76 இடங்களுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். தென்மேற்கு பருவமழை தொடா்பா... மேலும் பார்க்க