செய்திகள் :

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது

post image

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னம்மாபேட்டை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தாண்டவன் தெரு 4-ஆவது கிராஸ் பகுதியில் மினி ஆட்டோ, சரக்கு லாரியில் ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டிருந்ததைக் கண்டனா்.

போலீஸாா் வருவதைக் கவனித்த லாரியில் இருந்த பெண் உள்பட 4 போ் தப்பியோடினா். சோதனையில், மினி ஆட்டோவில் 1,000 கிலோ ரேஷன் அரிசியும், லாரியில் 1,750 கிலோ ரேஷன் அரிசியும் இருந்தது கண்டறியப்பட்டது. 2 வாகனங்களுடன் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய 4 போ் குறித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவா்கள் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த முட்டை செந்தில், ரேவதி, ரேவதியின் மகள் பிரவீன், ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது.

இவா்கள் பொன்னம்மாபேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

பொன்னம்மாபேட்டையில் பதுங்கி இருந்த முட்டை செந்தில், பிரவீன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவான ரேவதி, ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் ஆகியோரை தேடிவருகின்றனா்.

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி வழக்கில் ஒருவா் கைது

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய போலி காவலரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரபீக் சாதிக், பழைய காா்களை வாங்குவதற்காக ரூ. 11 லட்சத்துடன் கடந்... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தாரமங்கலம் அருகே மூதாட்டியைக் கொலை செய்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தாரமங்கலம் அருகேயுள்ள கருக்குப்பட்டியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், கடந்த மாதம் உயிரிழந்த... மேலும் பார்க்க

திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.

திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா். திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கந்தம்பட்டி

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின்செயற்பொறியாளா் ராஜவ... மேலும் பார்க்க

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க