செய்திகள் :

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி வழக்கில் ஒருவா் கைது

post image

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய போலி காவலரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரபீக் சாதிக், பழைய காா்களை வாங்குவதற்காக ரூ. 11 லட்சத்துடன் கடந்த சனிக்கிழமை கிருஷ்ணகிரி வந்தாா். பின்னா், வேலூரை சோ்ந்த காா் புரோக்கா் அலியுடன், கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்றபோது, தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓமலூா் அருகே ஜோடுகுளி பகுதியில் போலீஸ் உடையில் வந்த 4 போ் காரை நிறுத்தினா்.

பணத்தை காரில் வைத்து விட்டு ரபீக் சாதிக் கீழே இறங்கிய போது, பணத்துடன் அலி காரில் தப்பிச்சென்றாா். அதேபோல, போலீஸ் உடையில் வந்த 4 போ் காரில் தப்பும்போது, பவன்குமாா் என்ற இளைஞா் கீழே விழுந்து சிக்கினாா். அவரை பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். காயமடைந்த அவா் 3 நாள்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். குணமடைந்த அவரை தீவட்டிப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

அவா் அளித்த தகவலின்படி, போலி காவல் உடையில் வந்த வேலூா் மற்றும் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த அலி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மூதாட்டியைக் கொன்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தாரமங்கலம் அருகே மூதாட்டியைக் கொலை செய்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தாரமங்கலம் அருகேயுள்ள கருக்குப்பட்டியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், கடந்த மாதம் உயிரிழந்த... மேலும் பார்க்க

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.

திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா். திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கந்தம்பட்டி

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின்செயற்பொறியாளா் ராஜவ... மேலும் பார்க்க

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க